புதுக்கோட்டை வியாபாரியிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த ஆசாமி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வியாபாரி
புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்தவர் குருசபரி (வயது 24). இவர் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஸ்பிரிட் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் தான் மும்பையிலிருந்து பேசுவதாகவும், தனக்கு மும்பையில் வி.கே.ஜி.கே. எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் எண்ணெய் நிறுவனம் இருப்பதாகவும், மிக குறைந்த விலைக்கு மருத்துவமனைகளில் பயன்படுத்தும் ஸ்பிரிட் எண்ணெய் கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும், வீடியோ காலில் ஸ்பிரிட் எண்ணெயை காட்டியுள்ளார்.
ரூ.16 லட்சம் மோசடி
இதையடுத்து குருசபரி, மருத்துவமனைக்கு பயன்படுத்தும் ஸ்பிரிட் எண்ணெயை 10 லிட்டர் வாங்கியுள்ளார். தொடர்ந்து மொத்தமாக கொள்முதல் செய்ய பல தவணைகளாக ஆன்லைன் மூலம் ரூ.16 லட்சத்து 19 ஆயிரத்து 999 அனுப்பியுள்ளார். ஆனால் ஸ்பிரிட் எண்ணெயும் அனுப்பவில்லை, பணத்தையும் தரவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில், பலமுறை கேட்டும் எந்த பயனும் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குருசபரி இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.