மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது




மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி   உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படிமணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேல்குடி வட்டார வள மையம்  , அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி மற்றும்கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில்  இப் பயிற்சி நடைபெற்றது.

மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் மதிப்பிற்குரிய திரு.செழியன்  மற்றும் மதிப்புக்குரிய  திரு இந்திராணி ஆகியோர் ஆலோசனை படி மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம்   தலைமையில் தொடங்கியது.

இப்பயிற்சியில் தன்னார்வர்களுக்கு  ஒவ்வொரு மாணவரின் திறன்களின் நிலைக்கு ஏற்ப அனைத்து அடிப்படை திறன்களையும் மேம்படுத்துவது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.

 அதேபோல் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் அடிப்படை திறன்களை  மாணவர்களின் திறன்களை அறிந்து கற்றல் கற்பித்தல் நிகழ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

 மேலும் இப்பயிற்சியில் எளிய கற்றல் கற்பித்தல் உபகரணங்களை தயாரித்து மாணவர்களுக்கு செய்து காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. 

பயிற்சியில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர் வேல்சாமி மற்றும்  ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன்   ஆசிரியர்கள் திருமுருகன் நிஸாந்தினி முனியசாமி செபஸ்தியான்   ஆகியோர் செய்யப்பட்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments