வாகனம் மோதி வாலிபர் பலி: புதுக்கோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் உறவினர்கள் மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு




வாகனம் மோதி வாலிபர் பலியானார். இதையடுத்து, புதுக்கோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாலிபர் பலி

வடகாடு சேர்வைக்காரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது ஒரே மகன் ரமேஷ் (வயது 30), விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வடகாடு கடைவீதிக்கு டீக்குடிக்க நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

உறவினர்கள் மறியல்

இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி ரமேஷின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் புதுக்கோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் ரமேஷின் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments