புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் கை, கால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குறைபாடுடையோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகள் அனைவரும் கட்டாயமாக தங்களது ஆதார் எண், தேசிய அடையாள அட்டை எண், யூ.டி.ஐ.டி. எண், தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் பதிவேற்றம் செய்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே இதுநாள் வரையில் பயனாளி உயிருடன் உள்ளார் என கிராம நிர்வாக அலுவலரிடம் வாழ்நாள் சான்று, ஆதார் அட்டை நகல், யூ.டி.ஐ.டி. பதிவு எண் ஒப்படைக்காத மாற்றுத்திறனாளிகள் வருகிற 3-ந் தேதிக்குள் பயனாளியின் ஆதார் அட்டை நகல், யூ.டி.ஐ.டி. அட்டை நகல், வங்கி சேமிப்பு புத்தக நகல் பெற்று, மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள், புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.