சன்மார்க்கச் சேவகர்கள் மீது எல்லையில்லா அன்பு கொண்டவர் என்று ஓயிட் ஹவுஸ் அப்துல் பாரி மறைவுக்கு ஹாஜியார் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் வி.எஸ். அன்வர் பாதுஷாஹ் உலவி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:சென்னை பெரியமேட் ஒயிட்ஹவுஸ் குழுமத்தின் சேர்மன் ஆலிம்களின் நேசர் அல்ஹாஜ் அப்துல்பாரி அவர்கள் 28.01.2023 சனிக்கிழமை இரவு சுமார் 11:45 மணியளவில் ஏக இறைவனின் அழைப்பை ஏற்றார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட நம் அன்புக்குரிய அப்துல் பாரி ஹாஜியார் அவர்கள் மௌலானா மௌலவி அப்துல் ஹை பாகவி அவர்களின் மூத்த மகனாவார்.
சன்மார்க்கச் சேவகர்கள் மீது எல்லையில்லா அன்பு கொண்டவர், மார்க்கப்பணிகளுக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் குடும்பங்கள் மீது அக்கறை கொண்டவர், அவர்கள் அனைவரும் ஹஜ், உம்ரா செய்திட வேண்டும் என்று விரும்பியவர், புனித பூமியாம் மக்கா மதீனா செல்லவேண்டும் என்ற ஏக்கம் இருந்தும் செல்லும் வாய்ப்பில்லாத சன்மார்க்கச் சேவையாளர்களுக்கு முதல்முறையாக உம்ரா செல்வதற்கான ஏற்பாடுகளை தாமே செய்து கொடுத்தவர்.
நெடுஞ்சாலைகளில் நெடுந்தூரம் பயணம் செய்வோர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுதிட ஏதுவாக ஆங்காங்கே பள்ளிவாசல்களை எழுப்பி அவற்றை சமுதாயத்திற்கு சமர்ப்பித்தவர், இடது கைக்குத் தெரியாமல் தன் வலக்கரத்தால் ஈந்துவந்தவர்.
பேரன்பாளன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து நன்மைகளை அங்கீகரித்து மறுமை வாழ்வை உயர்வாக்கி மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்வான சுவனபதியை வழங்குவானாக. அவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் இதயங்களுக்கு 'சப்ருன் ஜமீல்' எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.