புதுக்கோட்டை மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் பிப்ரவரி மாதத்தில் 1-ந் தேதி முதல் 14-ந் தேதி முடிய இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் கால்நடை மருந்தகங்களின் மூலம் தொடர்புள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. கோழிக்கழிச்சல் வியாதியானது கோழிகள் மற்றும் இதர பறவை இனங்களை தாக்கக்கூடிய வைரஸ் கிருமியினால் ஏற்படக் கூடிய வியாதி ஆகும். இந்நோய் தாக்கப்பட்ட கோழிகளுக்கு உடனடியாக இறப்பு ஏற்பட்டு, கோழி வளர்ப்போருக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும். இந்நோய்க்கான தடுப்பூசி 8 வார வயதுடைய அனைத்து கோழிகளுக்கும் தங்களது கிராமத்திலேயே கால்நடை பராமரிப்பு துறையினரால் நாளை (புதன்கிழமை) முதல் 14-ந் தேதி முடிய குழுக்கள் அமைத்து போடப்படவுள்ளது. ஆகவே, கோழி வளர்ப்போர் தங்கள் கோழிகளை தடுப்பூசி முகாமிற்கு கொண்டு வந்து தடுப்பூசி போட்டு கோழிக்கழிச்சல் நோயிலிருந்து கோழிகளை பாதுகாத்து பயனடையலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.