அறந்தாங்கி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து கார், மோட்டார் சைக்கிள்கள், ரூ.4½ லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் கீழ தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாக நாகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அப்பகுதியில் நேற்று நாகுடி சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
6 வாலிபர்கள் கைது
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பர்வீன்குமார் (வயது 29), ராமு (23), கார்த்திக் (24), விக்னேஷ் (28), சரவணகுமார் (26), கிருஷ்ணமூர்த்தி (31) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்க பயன்படுத்திய கார், 8 மடிக்கணினிகள், 6 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள், ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்து 390-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.