கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது




புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. மீனவர்கள் தினந்தோறும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்நிலையில் வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலோர பகுதிகள் மற்றும் கடல் பகுதிகளில் காற்று பலமாக வீச கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல கூடாது என்று மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நாளை (புதன்கிழமை) முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments