திருவாரூர் - காரைக்குடி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேரத்தில் மாற்றம்: மாற்றப்பட்ட புதிய அட்டவணை வெளியீடு




திருவாரூர் - காரைக்குடி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேரத்தில் மாற்றம்: மாற்றப்பட்ட புதிய அட்டவணை  வெளியிடப்பட்டுள்ளது.

திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவை நேரத்தில் புதிய அட்டவணை மாற்றப்பட்டு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .இன்று பிப்ரவரி 03 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது 




06197 திருவாரூர் - காரைக்குடி 

வண்டி எண்-06197 திருவாரூர் - வழித்தடத்தில் தற்போது வாரத்தில் 5 நாள்கள் (சனி ஞாயிறு தவிர)  இயக்கப்படுகின்றது. மேலும், இந்த ரயில்  நேரத்தில் மாற்றப்பட்டு,  புதிய கால அட்டவணையை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  

அதன்படி,  திருவாரூரில் காலை 08:20 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், பிற்பகல் காலை.11.45-க்கு காரைக்குடி சென்றடையும். 

06198 காரைக்குடி - திருவாரூர் 

பின்னர்,  அங்கிருந்து மதியம் 04:00 மணிக்கு புறப்பட்டு இரவு 07.30 மணிக்கு திருவாரூர் வந்து சேரும். காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் போது நேரத்தில் மாற்றம் இல்லை 

இந்த ரயில் திருவாரூர், மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளக்கம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை,  ஒட்டாங்காடு , பேராவூரணி, ஆயிங்குடி ,அறந்தாங்கி ,  வளரமாணிக்கம் , பெரியகோட்டை, கண்டனூர் புதுவயல் காரைக்குடி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்..

இது குறித்து திருவாரூர் மாவட்ட உபயோகத்தின் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பேராசிரியர் பாஸ்கரன் அவர்கள் கூறுகையில் 

தஞ்சை மார்க்கத்திலிருந்தும் நாகப்பட்டினம் மார்க்கத்திலிருந்தும் காலையில் திருவாரூர் வரும் ரயில்கள் தாமதமாக வந்தால் திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் பயணிகள்६ அலுவலகம் செல்வோர் ரயிலை தவறவிடும் சூழல் இருந்து வந்தது. ஆகையால் திருவாரூரில் இருந்து காரைக்குடி புறப்படும் ரயிலை 8-20க்கு மாற்றித் தருமாறு திருச்சிராப்பள்ளி கோட்ட மேலாளர் அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட இரயில் உபயோகிப்போர் சங்கத்தின் சார்பாக மனு கொடுத்திருந்தோம். 

உரிய முறையில் இதை நிறைவேற்றி தந்த தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் திரு. மணிஷ்அகர்வால் அவர்களுக்கும் இந்த தடத்திற்கு புத்துயிர் தந்து கொண்டிருக்கின்ற முதுநிலை இயக்கவியல் மேலாளர் திரு. ஹரி குமார் அவர்களுக்கும் நன்றி. 

தொடர்ந்து என்னிடம் இந்த கோரிக்கைக்கு அழுத்தம் தர பல முறை வேண்டுகோள் விடுத்த ரயில்வே நண்பர்கள் மற்றும் தொடர் பயணிகளின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
03-02-2023 முதல் திருவாரூர்- காரைக்குடி பயணிகள் ரயில் காலை 8:20  க்கு திருவாரூரில் இருந்து புறப்படும் என்பதை  கவனத்தில் கொள்ளவும். 

குறிப்பு:  தற்போது திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை இயக்கப்படுகிறது சனி ஞாயிறு இயங்கவில்லை என குறிப்பிடத்தக்கது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments