புதுக்கோட்டையில் இருந்து திருச்சி வந்த அரசு பஸ்சில் பச்சிளம் ஆண் குழந்தையை கல்நெஞ்சம் படைத்த தாய் விட்டுச்சென்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பச்சிளம் ஆண் குழந்தை
புதுக்கோட்டையில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று வந்தது. அதில் இருந்த அனைத்து பயணிகளும் இறங்கி சென்றுவிட்டனர். டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோரும் சாப்பிட சென்று விட்டனர். பின்னர் அவர்கள் மீண்டும் பஸ்சை இயக்க அதில் ஏறினர்.
அப்போது பஸ்சின் கடைசி இருக்கையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே கண்டக்டரும், டிரைவரும் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று பயணிகள் அமரும் இருக்கையில் கிடந்தது. குழந்தையின் அருகில் பாலுடன் கூடிய பால் பாட்டில், உடைகள் ஆகியவையும் இருந்தன.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதையடுத்து டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் இதுபற்றி புறக்காவல் நிலைய போலீசாரிடம் தெரிவித்து அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர். மேலும் அவர்கள், குழந்தை பசியில் அழுததால் பாட்டிலில் இருந்த பாலை குழந்தைக்கு கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு வந்த சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், ஆலோசகர் பிரியா ஆகியோர் குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக்குழு ஆணையின்படி திருச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். அங்கு சிசு வார்டில் இன்குபேட்டரில் வைத்து குழந்தை பாதுகாக்கப்படுகிறது.
கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கண்டோன்மெண்ட் போலீசார், அந்த பச்சிளம் குழந்தையை விட்டுச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? எதற்காக விட்டுச்சென்றார்? என்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.