தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தொண்டிகுளம் சர்க்கார் தோப்பு கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்வம்-கனகாம்பாள். இவர்களது இளைய மகன் கார்த்திக் (வயது 24). இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் மலேசியாவிற்கு ராமேசுவரம் பகுதியை சேர்ந்த ஏஜெண்டு மூலமாக வேலைக்கு சென்றுள்ளார். அங்கு 6 மாதங்களாக பணிபுரிந்து வந்த நிலையில், பணிச்சுமை அதிகமாக இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீேழ விழுந்தார். இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து கார்த்திக் பெற்றோர் தனது மகனை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரையிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் கார்த்திக்கை தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.