முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 9-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.
விளையாட்டு போட்டிகள்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 9-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களும், குழு போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர், வீராங்கனைகளும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவர்.
வயது சான்று, ஆதார் கார்டு
ஏற்கனவே போட்டிகளில் கலந்து கொள்ள இணைய தளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் போட்டிகள் நடைபெறும் விவரத்தினை குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிந்து கொள்ளலாம். வயது சான்று, ஆதார் கார்டு, வங்கி புத்தக நகல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் படிப்பதற்கான சான்றிதழ்கள், அரசு ஊழியர்கள் நிரந்தர பணியாளர்களுக்கான அடையாள அட்டை எடுத்து வர வேண்டும்.
போட்டியாளர்கள் போட்டி நடக்கும் இடத்திற்கு காலை 7 மணிக்கு வர வேண்டும். இணைய தளத்தில் பதிவு செய்யாதவர்கள் நேரடியாக போட்டியில் கலந்து கொள்ள இயலாது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் அதிகாரியை 7401703498 என்ற செல்போன் எண்ணிலோ (அல்லது) 04322 222187 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.