புதுக்கோட்டை-இலுப்பூர் சாலையில் அன்னவாசல் அருகே காலாடிப்பட்டி சத்திரத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கி விட்டு சாலையை கடக்க முயன்றுள்ளது. ஆனால் வயிற்றில் இரை அதிக அளவு இருந்ததால் அந்த மலைப்பாம்பினால் சாலையை கடக்க முடிய வில்லை. இதனால் அந்த மலைப்பாம்பு சாலையிலேயே கிடந்தது. இதனால் அவ்வழியாக இருபுறமும் சென்ற வாகனங்கள் அப்படியே நின்றது. இதனையடுத்து வாகனங்களில் வந்தவர்கள் கீழே இறங்கி செல்போன்களில் படம் பிடித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி இளைஞர்கள் இணைந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்குபையில் அடைத்தனர். பின்னர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினரிடம் மலைப்பாம்பு ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மலைப்பாம்பை வனத்துறையினர் நார்த்தாமலை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.