அறந்தாங்கி ரயில் நிலையத்தில் & பேராவூரணி ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் IRTS ஆய்வு கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டதும் திருவாரூர்- காரைக்குடி அகல ரெயில் பாதையில் சென்னைக்கு இரவில் ரெயில்கள் இயக்க நடவடிக்கை




அறந்தாங்கி ரயில் நிலையம் 

அறந்தாங்கி ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால், மூத்த ரெயில்வே பாதுகாப்பு அலுவலர் சரவணன், கிழக்கு கோட்ட பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவாரூர்- காரைக்குடி அகல ரெயில் பாதையில் கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டதும் திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதையில் சென்னைக்கு இரவில் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிருபர்களிடம் அவர் தெரிவித்தார்.






பேராவூரணி ரெயில் நிலையத்தில் ஆய்வு

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால், மூத்த ரெயில்வே பாதுகாப்பு அலுவலர் சரவணன், கிழக்கு கோட்ட பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் ரெயில்வே அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அசோக்குமார் எம்.எல்.ஏ., நகர வர்த்தகர் கழகம், ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கம், பேராவூரணி ரெயில் பயணிகள் சங்கம், அரிமா சங்கம், வக்கீல் சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வாலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னைக்கு ரெயில்

காரைக்குடியில் இருந்து பேராவூரணி வழியாக இரு முனைகளில் இருந்தும் சென்னைக்கு ரெயில் இயக்க வேண்டும். காரைக்குடி - திருவாரூர் வழித்தடத்தில் இரவு நேர கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும்.

ஏற்கனவே இயங்கி வந்த விரைவு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து விரைவு ரெயில்களும் பேராவூரணி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பதிவில்லா ரயில் பெட்டிகளை கூடுதலாக அனுமதிக்க வேண்டும்.

முன்பதிவு மையம்

பேராவூரணி ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். முன்பதிவு மையத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.

அப்போது பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், தி.மு.க. நிர்வாகிகள் கணபதி, அப்துல் மஜீத், வர்த்தக சங்க கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர் கந்தப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments