5000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட கோபாலபட்டிணம் எனும் ஊரை தலைமையிடமாக கொண்டு கோபாலபட்டிணம் தனி ஊராட்சியாக அரசு அனுமதித்து ஆணை வழங்கிட தமிழக முதல்வருக்கு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA கடிதம் எழுதியுள்ளார்..
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
வணக்கம். எனது அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாட்டாணி - புரசக்குடி ஊராட்சி தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஊராட்சி மன்றங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய 12 கிராமங்களை சேர்ந்த பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கீழ்கண்டவாறு இரண்டாக பிரித்து நிறைவேற்றித்தரக் கேட்டுக் கொள்கிறேன்.
சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட கோபாலபட்டிணம் எனும் ஊரை தலைமையிடமாக கொண்டு கோபாலபட்டிணம் ஊராட்சி என்றும் மீதமுள்ள கிராமங்கள் சேர்த்து ஏற்கனவே உள்ளபடி நாட்டாணி - புரசக்குடி ஊராட்சி என்றும் இரண்டு ஊராட்சிகளாக செயல்பட அரசு அனுமதித்து அதற்கான ஆணை வழங்கிட வேண்டுமென்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.