ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணிதிட்டம் மற்றும் பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததானம் முகாம் கல்லூரி வளாகத்தில் நடத்தினர். கல்லூரி நிதியாளர் கண்ணன் தலைமை தாங்கி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் ரமேஷ் வரவேற்று பேசினார். அறந்தாங்கி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், கல்லூரி பேராசிரியர்களிடம் 60 யூனிட் ரத்தம் பெற்று அறந்தாங்கி அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அளித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் ஜீவரத்தினம் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.