புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நடைபெற்ற பா.ஜ.க. ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின். சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார். இதைதொடர்ந்து கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட பொதுச் செயலாளர் சலீம் அம்ஜத்தை அவருடைய இல்லத்திற்கு சென்று சந்திப்பதற்கு அறந்தாங்கி பயணியர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்றார். இவரது வருகைக்கு கோட்டைப்பட்டினம் ஊர் ஜமாஅத் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் கோட்டைப்பட்டினம் செல்வதை தவிர்க்குமாறு வேலூர் இப்ராஹிமிடம் போலீசார் தெரிவித்தனர். அதையும் மீறி அவர் கோட்டைப்பட்டினம் செல்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவருடன் வந்த கட்சி நிர்வாகிகளையும் அங்கு செல்ல வேண்டாம் என்று போலீசார் கூறினர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் இப்ராஹிம் மற்றும் அவருடன் வந்த 22 பேரை கைது செய்து, அரசு பயணியர் மாளிகையில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் இரவு விடுவிக்கப்பட்டனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து அறந்தாங்கி அரசு பயணியர் மாளிகையில் பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.