கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானம் நேற்று இரவு 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. திருச்சியில் இருந்து மீண்டும் நள்ளிரவு 1.10 மணிக்கு புறப்பட்டு கோலாலம்பூர் செல்ல வேண்டும். ஆனால், கோலாம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வரும்போது வானில் பறந்து கொண்டிருக்கும்போது பறவை மோதியதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தரையிறங்கிய பிறகு விமானி தெரிவித்துள்ளார்.
ஆனால், அதன்பிறகு இதுவரை விமானம் புறப்படவில்லை. அதே விமானத்தில் பயணம் செய்ய இருந்த 178 பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் 12 மணி நேரமாக காத்திருக்கின்றனர். விமானம் விரைவில் புறப்பட தயாராகும் என திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த விமானம் பொதுவாக இரவு 11.40 மணிக்கு வந்து இறங்கி மீண்டும் இரவு 12 .10 மணிக்கு புறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதையடுத்து 4.15 மணிக்கு திருச்சியில் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு ஏர்ஏசியா விமானம் 178 பயணிகளுடன் புறப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.