ஆர்.புதுப்பட்டினம் சுன்னத் ஜமாத் அறிவித்த சாலை மறியல் போராட்டம்: வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் நேரடியாக ஆய்வு!



ஆர்.புதுப்பட்டினம் சுன்னத் ஜமாத் சாலை மறியல் போராட்டம் அறிவித்ததின் எதிரொலியாக கிராமத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் நேரடியாக ஆய்வில் ஈடுபட்டனர். 

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டி வருகிற 15.03.2023 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை செக்போஸ்ட் அருகில், R.புதுப்பட்டினம் நுழைவு சாலையில் ஜமாத் தலைவர் பிரியம்.காதர் தலைமையில் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என துண்டு பிரசுரம் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் அதன் எதிரொலியாக இன்று 09/03/2023 ஆர்.புதுப்பட்டினம் கிராமத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் நேரடியாக ஆய்வில் ஈடுபட்ட நிலையில் பெண்கள் குளிக்கும் பகுதியில் தேங்கி இருந்த குப்பைகளை உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் சரி செய்யப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் ஊராட்சி மன்ற நிர்வாகம் உறுதியளித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து ஜமாத் நிர்வாகம் கூறுகையில் ஊராட்சி நிர்வாகம் உறுதியளித்தபடி அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்கவில்லை என்றால் எங்களுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

தகவல்: சேக் தாவூத், ஆர்.புதுப்பட்டினம்.



ஜமாத் நிர்வாகம் சார்பில் சாலை மறியல் போராட்டம் குறித்து வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments