இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பெட்டிக்கடைக்காரர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உப்புகுள தெருவில் வசித்து வந்தவர் சண்முகம் (வயது 65). இவர், திருத்துறைப்பூண்டி ஜவுளிக்கடை தெருவில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.
இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், கோபி கிருஷ்ணன் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆன நிலையில், இவர் மகன் மற்றும் மனைவியோடு வசித்து வந்தார்.
இந்த நிலையில் திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் ரெயில் நேற்று காலை திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. சிறிது தூரம் சென்றதும் நெடும்பலம் ரெயில்வே கேட் அருகில் சண்முகம் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்று உள்ளார்.
ரெயில் மோதி தலை துண்டாகி பலி
அப்போது சண்முகத்தின் மீது ரெயில் மோதியது. இதில் அவர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார், சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார், சண்முகம் தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகம்
ரெயில் மோதி தலை துண்டாகி பெட்டிக்கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.