தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் ரெங்கராஜன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரிய, ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ரெங்கராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்களை தற்போது பள்ளி கல்வித்துறை அமல்படுத்தி வருகிறது. இதனால் தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரிக்கிறதா? என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியது போன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதிய உயர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை நிறைவேறாவிட்டால் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம், என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.