தஞ்சாவூர் மாவட்டம், பட்டுகோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை சேர்ந்த வீரசேனன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையம் நாடியம்மன் கோயில் மேற்கு தெற்கு பகுதியில் 3. 67 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், காவல் நிலையம், பதிவாளர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் உள்ளன. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. பொது மக்களுக்கு பயனுடையதாக உள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்தை புதிய இடத்தில் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நரியம்பாளையம் பகுதியில் அமைய உள்ள இந்தப் பகுதி ஏற்கனவே கோடைகால தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் தண்ணீர் தேக்கி வைக்க அந்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பட்டுக்கோட்டையின் நகரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் குறுகலான சாலையில் உள்ளது. இது பொது மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை. எனவே இந்த பணிக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் விசாரித்தனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், நகராட்சி வழக்கறிஞர் ஜெய் வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகி பொதுமக்கள் நலன் கருதி வெளியூர் பேருந்து நிலையம் அமைக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.