இந்தியாவில் அதிவேக ரெயில் சேவையை அமல்படுத்தும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. பயண நேரத்தை பெரிதும் குறைப்பதால் வந்தே பாரத் ரெயில் சேவையை பயன்படுத்த பயணிகள் பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கினர். அந்தவகையில், 2022-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி சென்னை - மைசூரு இடையில் 5-வது வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டது. தற்போது 17 மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்த அதிவேக ரெயில்சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
எனவே, தமிழகத்திற்குள் வந்தே பாரத் ரெயிலை இயக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் 2-வது வந்தே பாரத் ரெயில் சேவை சென்னை-கோவை இடையே ஏப்ரல் 8-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி நேரில் தொடங்கி வைக்க உள்ளார். இந்த வந்தே பாரத் ரெயில் பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இதேபோல, அன்றைய தினம் ரூ.294 கோடி மதிப்பிலான 3 ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை தெற்கு ரெயில்வே மேற்கொண்டு வருகிறது.
சோதனை ஓட்டம்
இந்த நிலையில், சென்னை-கோவை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் சேவைக்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் இருந்து அதிகாலை 5.42 மணிக்கு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் சென்னை கோட்ட அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இருந்தனர். 8 பெட்டிகளுடன் புறப்பட்ட ரெயில் ஜோலார்ப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்பட்டு சரியாக காலை 11.17 மணிக்கு கோவை ரெயில் நிலையம் சென்றடைந்தது. சரியாக சென்னையில் இருந்து கோவைக்கு 5 மணி நேரம் 35 நிமிடங்களில் சென்றது. வந்தே பாரத் ரெயில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கமுடியும் என்றாலும், சோதனை ஓட்டத்திற்காக 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலேயே இயக்கப்பட்டது. சில ரெயில் நிலையங்களுக்கு இடையில் மட்டுமே 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
குறைவான நிறுத்தம்
கோவையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.01 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது. அதன்படி, ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்ட நேரத்திற்குள் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. மேலும், ரெயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் ஏப்ரல் 8-ந்தேதி முதல் சென்டிரல் ரெயில் நிலையத்தில் மதியம் 2 மணிக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கோவை ரெயில் நிலையம் சென்றடையும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மற்ற ரெயில்களை விட குறைவான நிறுத்தம், வேகம் அதிகரிப்பு காரணமாக பயண நேரம் பாதியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.