பட்டுக்கோட்டையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் அரசு விரைவு பேருந்தை பேராவூரணி வரை நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பேராவூரணி மக்கள் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பேருந்து நிலையத்திற்கு சென்று தான் திருப்பதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், பேராவூரணியில் இருந்து திருப்பதிக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்தை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பட்டுக்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்து செல்வதாகவும், அதை பேராவூரணி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், மத்திய அரசு 15 ஆண்டுகள் பயன்படுத்திய பேருந்துகளை scrap-ல் போட வேண்டும் என தெரிவித்துள்ளதாகவும், புதிய பேருந்துகள் வந்தவுடன் பேராவூரணி வழித்தடத்திற்கும், புதிய வழித்தடங்களுக்கும் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.