கருமொழி என்ற இடத்தில் வந்த போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. விபத்து தொடர்பாக திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் மீன் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று இங்கிருந்து கேரள மாநிலத்திற்கு பதப்படுத்தப்பட்ட இறால், கனவாய் உள்ளிட்ட ஏராளமான மீன்கள் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது. லாரியை அய்யம்பட்டினத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் ஓட்டினார். அவருடன் ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரியும் மாரிமுத்து (வயது 51) உடன் சென்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருச்சி-ராமேசுவரம் சாலையில் சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது. கருமொழி என்ற இடத்தில் வந்த போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையை விட்டு இறங்கிய லாரி 30 அடி தூரத்தில் உள்ள குப்புசாமி என்பவர் வீட்டின் மீது பயங்கரமாக மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். டிரைவர் ஜெயபிரகாஷ் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி மோதிய வேகத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை. இந்த விபத்து தொடர்பாக திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.