போட்டி தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், இலவச பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க உள்ளதாக, சமீபத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்காக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்ட தகவல் பின்வருமாறு:
டி.என்.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி, வங்கித் தேர்வு, ஆர் .ஆர்.பி ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தமிழக அரசு சார்ப்பில் இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரியிலும், நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
பயிற்சியில் சேர விரும்புவோர் www.civilservicecoaching.com என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணபிக்கவும். இன்று முதல் அதாவது மார்ச் 15 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 7373532999, 9894541118, 8667276684, 8489334419 தொலைபேசி எண்களை தொடர் கொள்ளலாம்.
பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் நபர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்பைடையில் பயிற்சிக்கு நபர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகும். ஏப்ரல் 10-ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.