புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டு ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி ரமலான் பிறை 06 (29/03/2023) முதல் 25 (17/04/2023) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் 29/03/2023 ரமலான் பிறை-06 முதல் இணைய வழி இஸ்லாமியப் போட்டிக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
முக்கிய வேண்டுகோள்:
- கேள்வி பதில் போட்டியின் முதல் நாளன்று எவ்வாறு தங்களுடைய பெயரையும், முகவரியையும் பதிவு செய்துள்ளீர்களோ அதுபோலவே தினமும் பதிவு செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கேள்விக்கான பதிலை அளித்துவிட்டு SUBMIT செய்து விட்டீர்களா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
- நீங்கள் SUBMIT செய்துவிட்டு மீண்டும் ஒருமுறை கேள்விக்கான Link-ஐ கிளிக் செய்து சோதித்து பார்த்துக் கொள்ளவும் . நீங்கள் SUBMIT செய்திருந்தால் "You have already answered this question" என்று வரும் இல்லையென்றால் மீண்டும் பதிலை அளித்துவிட்டு SUBMIT செய்யவும்.
பிறை 15-க்கான கேள்விகள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதில் அளிக்கவும்.
அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டீர்களா என்று சரிபார்த்துக் கொண்டு SUBMIT செய்யவும்.
குறிப்பு: கேள்விக்கான பதிலை இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
🚨 கேள்வி பதில் நிகழ்ச்சியின் இரு முக்கிய விதிமுறை🚨
- ஒரு நபர் தனது வேறு, வேறு பெயர்களில் இரண்டு முறை பதில் அனுப்பக் கூடாது. (உதாரணத்திற்கு ஒரு தாயோ, தந்தையோ தனது இரண்டு பிள்ளைகள் பெயரில் இரு முறை பதில் அனுப்பினால் அந்த பதில் இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்).
- பதில் அளிக்கக்கூடிய நபர் தனது பெயரில் ஒரு முறை மட்டுமே பதில் அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் வந்தால் இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- தனக்கு பதில் தெரிந்தால் முடிந்தளவு மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளவும்.
பிறை-14 கேள்விக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்று பதில் அளித்த அனைவரும் தாங்கள் பதில்களை சரியாக தேர்வு செய்திருக்கிறோமா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.
1. சுவனத்தில் சுவன வாசிகளின் பிராத்தனை என்ன?
سُبْحٰنَكَ اللّٰهُمَّ
அதில் அவர்கள்: “(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசுத்தமானவன்” என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். “எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே” என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும். (அல்குர்ஆன் 10:10)
2.இவரோடு சேர்ந்து பறவைகளும் தஸ்பீஹ் செய்யும் அந்த நபர் யார் -?
தாவூத் (அலை) (அல்-குர்ஆன் (21:79))
3. (சந்ததியில்லாமல்) என்னை தனியாக விட்டு விடாதே என்று கூறி குழந்தை பாக்கியம் பெற்ற நபி யார்? வசன எண்ணையும் குறிப்பிடவும்.
ஜகரியா (அலை) (அல்குர்ஆன் 21:89)
4. ஒரு பெண்ணையும் அவர்களது மகணையும் உலக மக்களுக்கு அல்லாஹ் அத்தாட்சியாக ஆக்கியுள்ளான். அவர்கள் யார்?எந்த வசனம்.?
மர்யம் (அலை), ஈஸா நபி (அல்குர்ஆன் 21:91)
5.அவர்களை இருளோ , இழிவோ சூழ்ந்துக் கொள்ளாது என அல்லாஹ் எவர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறான். அந்த வசன எண் எது-?
சுவனவாசிகள் (அல்குர்ஆன் 10:26)
இந்தப் போட்டியை குறித்து ஏதேனும் கருத்துக்கள் மற்றும் வேண்டுகோள் இருந்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிவிக்கவும்…
இந்த போட்டியை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.