மீமிசல் - நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் வளர்ந்து வரும் கருவேல மரங்களால் ஊர் பெயர் பலகை மறைப்பதுடன் மற்றும் விபத்தை ஏற்படுத்தும் முன்பே அகற்றப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
சாலை ஓரத்தில் கருவேல மரம்
புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை மீமிசலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள், லாரிகள் உள்பட கனரக வாகனங்கள் அதிகமாக செல்கிறது. பிரதான சாலையாக உள்ள இதில் சில இடங்களில் சாலையோரங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து வருகிறது. இதனால் ஒரே நேரத்தில் சாலையில் இருபுறமும் வாகனங்கள் வரும் போது இரு சக்கர வாகனங்கள் சாலையோரம் ஒதுங்கினால் அந்த சீமைக்கருவேல மரச்செடிகளின் கிளைகள் அவர்கள் மீதோ அல்லது வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மீதோ படக்கூடிய நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படக்கூட நேரிடலாம்.
ஊர் பெயர் பலகை மறைப்பு
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் நுழைவாயிலில் நெடுஞ்சாலை துறை சார்பில் வாகன ஓட்டிகள் ஊர் பெயரை தெரிந்து கொள்ளும் வகையில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கோபாலப்பட்டிணம் அருகே கடந்த சில நாட்களாகவே வளர்ந்து வரும் சீமை கருவேல மரக்கிளை ஊர் பெயர் பலகையை மறைக்கும் நிலையில் உள்ளது. இதனால் புதிதாக இங்கு வருபவர்கள் சரியான இடம் தெரியாமல் அவதிப்படுகின்றனர்.
இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் ஊர் பெயரை அறிந்து கொள்ளவதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் மாற்று வழியில் சென்று விடுகின்றனர்.
கோரிக்கை
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் சற்று கவனம் செலுத்தி ஊர் பெயர் பலகையை மறைத்தும், சாலையில் ஓரத்தில் வளர்ந்து வரும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் காட்டுச்செடிகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். இந்த முட்புதர்கள் மற்றும் செடியினால் விபத்து ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.