வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பியபோது தாறுமாறாக ஓடிய கார், பஸ் மீது மோதியதில் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நடந்த இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-
தாறுமாறாக ஓடிய கார்
சிவகங்கை மாவட்டம் பாகனேரி பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்(வயது 47), ரமேஷ்(45), ஆறுமுகம் (54). இவர்கள் 3 பேரும் நேற்று வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். காரை சுரேஷ் ஓட்டினார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் அருகே வந்தபோது கார் தாறுமாறாக ஓடியது. அப்போது முத்துப்பேட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோதிவிட்டு கார் நிற்காமல் வேகமாக சென்றது.
காரில் இருந்தபடியே சாவு
இதில் பஸ்சின் முன்பக்கம் சேதமாகி டயர் வெடித்தது. இந்த நிலையில் பஸ்சை டிரைவர் சந்திரசேகரன் சாமார்த்தியமாக ஓரம் கட்டி நிறுத்தினார். இதனால் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் மோதிவிட்டு சென்ற கார் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உப்பூர் கிராமம் அருகே நின்றது.
இந்த விபத்தில் காரின் பின்பக்கம் அமர்ந்து இருந்த ரமேஷ் படுகாயமடைந்த நிலையில் காரில் இருந்தபடியே பரிதாபமாக இறந்தார்.
2 பேர் படுகாயம்
மேலும் இ்ந்த விபத்தில் சுரேஷ், ஆறுமுகம் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விபத்தில் பலியான ரமேஷ் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.