தஞ்சையில் இருந்து திருச்சி சென்ற அரசு பஸ், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் கண்டக்டர், டிரைவர் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரசு பஸ்
தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு 28 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. தஞ்சையை சேர்ந்த டிரைவர் ஜான்மில்லர் (வயது 51) என்பவர் பஸ்சை ஓட்டிவந்தார். கண்டக்டராக தஞ்சையை சேர்ந்த மணிகண்டன் (49) பணியில் இருந்தார்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டி.வி.எஸ். டோல்கேட் மேம்பாலத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் பஸ் வந்த போது, அரியலூரில் இருந்து சிமெண்டு லோடு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை அரசு பஸ் டிரைவர் முந்த முயன்றார்.
லாரி மீது மோதல்
அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சின் இடது பக்கம், லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து பஸ் கண்டக்டர் மணிகண்டன், டிரைவர் ஜான் மில்லர் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 28 பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
இதில் காயம் அடைந்த 30 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 7 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடுதிரும்பினர்.
23 பேர் சிகிச்சை
கண்டக்டர் உள்ளிட்ட 23 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து லாரி டிரைவர் புதுக்கோட்டையை சேர்ந்த நல்லுசாமி(41) திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.