ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல்நிலை பேரூராட்சி பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நிலவும் கடும் வெப்பத்தால் வழக்கமாக வழங்கப்படும் குடிநீரின் அளவை விட மிகக்குறைந்த அளவே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை தடையின்றி வழங்க தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கரு.மாணிக்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
தொண்டி பேரூராட்சி பகுதியில் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் பொருத்தவும், மீன் வளத்துறைக்குச் சொந்தமான இடத்தில் முன்பு செயல்பட்டு வந்த ஐஸ் பிளாண்ட்டை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். தொண்டி ஜெட்டி பாலத்தை சீரமைக்கவும், தொண்டியை தனி தாலுகாவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டி-மதுரை சாலையில் உள்ள செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி உட்புறம் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும், புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர வேண்டும், தொண்டி பேரூராட்சிக்கு சொந்தமாக சேந்தனி போர்வெல் பழுதடைந்துள்ளதால் அதன் அருகில் புதிதாக போர்வெல் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.எல்.ஏ.விடம் மனுவை வழங்கினர்.
அப்போது தொண்டி நகர காங்கிரஸ் தலைவர் காத்தராஜா, தி.மு.க. செயலாளர் இஸ்மத் நானா ஆகியோர் உடனிருந்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.