ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரமலான் பிறை 20-க்கான கேள்விகள்!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டு ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி ரமலான் பிறை 06 (29/03/2023) முதல் 25 (17/04/2023) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் 29/03/2023 ரமலான் பிறை-06 முதல் இணைய வழி இஸ்லாமியப் போட்டிக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

முக்கிய வேண்டுகோள்:
  • கேள்வி பதில் போட்டியின் முதல் நாளன்று எவ்வாறு தங்களுடைய பெயரையும், முகவரியையும் பதிவு செய்துள்ளீர்களோ அதுபோலவே தினமும் பதிவு செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • கேள்விக்கான பதிலை அளித்துவிட்டு SUBMIT  செய்து விட்டீர்களா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
  • நீங்கள் SUBMIT செய்துவிட்டு மீண்டும் ஒருமுறை கேள்விக்கான Link-ஐ கிளிக் செய்து சோதித்து பார்த்துக் கொள்ளவும் . நீங்கள் SUBMIT செய்திருந்தால் "You have already answered this question" என்று வரும் இல்லையென்றால் மீண்டும் பதிலை அளித்துவிட்டு SUBMIT  செய்யவும்.

பிறை 20-க்கான கேள்விகள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதில் அளிக்கவும்.


குறிப்பு: 
  • முதல் நான்கு கேள்விகள் கோடிட்ட இடத்தை நிரப்புக வடிவில் இருக்கும். (4X1=4).
  • அடுத்த மூன்று கேள்விகளுக்கும் வழக்கம் போல் பதிலளிக்க வேண்டும். (3X2=6) மொத்தம் 10 மதிப்பெண்கள்.
  • கேள்விக்கான பதிலை இந்திய நேரப்படி மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

  • அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டீர்களா என்று சரிபார்த்துக் கொண்டு SUBMIT செய்யவும்.

     🚨 கேள்வி பதில் நிகழ்ச்சியின் இரு முக்கிய விதிமுறை🚨
    1. ஒரு நபர் தனது வேறு, வேறு பெயர்களில் இரண்டு முறை பதில் அனுப்பக் கூடாது. (உதாரணத்திற்கு ஒரு தாயோ, தந்தையோ தனது இரண்டு பிள்ளைகள் பெயரில் இரு முறை பதில் அனுப்பினால் அந்த பதில் இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்).
    2. பதில் அளிக்கக்கூடிய நபர் தனது பெயரில் ஒரு முறை மட்டுமே பதில் அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் வந்தால் இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    3. தனக்கு பதில் தெரிந்தால் முடிந்தளவு மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளவும்.
    பிறை-19 கேள்விக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    போட்டியில் பங்கேற்று பதில் அளித்த அனைவரும் தாங்கள் பதில்களை சரியாக தேர்வு செய்திருக்கிறோமா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.

    1. (சுலைமான் நபியிடம்) நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதனை (சிம்மாசனத்தை) நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன் என்று சொன்னது. யார் _? வசன எண் குறிப்பிடுக.

    இஃப்ரீத் என்ற ஜின் (அல்குர்ஆன் : 27:39) 

    2. உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒரு  படைப்புக்குப் பின் மற்றொரு படைப்பாக இத்தனை இருள்களில் அல்லாஹ்   உங்களைப் படைக்கிறான் என்று அல்லாஹ் கூறும் எண்ணிக்கை எத்தனை?

    மூன்று இருள்கள்(அல்குர்ஆன் : 39:6)

    3. அல்லாஹ்வைத் தவிர ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் இவரையே ஆக்கிக் கொண்டிருப்பேன் என நபியவர்கள் யாரை குறிப்பிட்டார்கள்?

    அபூபக்கர் ஸித்திக் (ரலி) (புகாரி 3654)

     4. ஒருவர் இதை விட சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது என நபியவர்கள்  எதனை குறிப்பிட்டார்கள்? 

    ”ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. (புகாரி 2072)

    5. யார் பூமிக்கு மேல் நடமாடும் ஷஹீதை ( உயிர் நீத்த தியாகியை) பார்க்க விரும்புகிறார்களோ அவர் இவரைப் பார்க்கட்டும் என நபியவர்கள் குறிப்பிட்ட நபித் தோழர் யார் _?

    தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்

    இந்தப் போட்டியை குறித்து ஏதேனும் கருத்துக்கள் மற்றும் வேண்டுகோள் இருந்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிவிக்கவும்…


    இந்த போட்டியை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


    எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



    Post a Comment

    0 Comments