புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை மானாமதுரை அருப்புக்கோட்டை வழியாக திருச்சி-விருதுநகர் ரெயில் கழிவறை வசதி பெட்டியுடன் இயக்கப்படுகிறது. இதனை தினசரி ரெயிலாக மாற்ற பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கழிவறை வசதி
புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை மானாமதுரை அருப்புக்கோட்டை வழியாக திருச்சி-விருதுநகர் இடையே 217 கி.மீ. தூரம் ஒரே ரெயில் எண்ணுடன் பயணிகள் ரெயில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது.
இதனை நிர்வாக காரணங்களுக்காக விருதுநகர்-காரைக்குடி-திருச்சி, திருச்சி-காரைக்குடி- விருதுநகர் என பிரிக்கப்பட்டு இரு எண்களை கொண்ட ரெயில்களாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயிலில் முதலில் கழிவறை வசதி இல்லாத டெமு ரெயிலாக இயக்கப்பட்டது. இந்த ரெயிலை கழிவறை வசதி பெட்டியுடன் கூடிய ரெயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் திருச்சி-காரைக்குடி-விருதுநகர் ரெயில் இரு மார்க்கத்திலும் கழிவறை வசதியுடன் கூடிய ஐ.சி.எப். பெட்டியாக சமீபத்தில் மாற்றப்பட்டது.
இந்த ரெயில் தற்போது கழிவறை வசதியுடன் கூடிய ரெயிலாக இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினசரி ரெயிலாக...
திருச்சி-காரைக்குடி- விருதுநகர் ரெயிலானது வாரத்தில் சனிக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும்,
மறுமார்க்கத்தில் விருதுநகர்-காரைக்குடி-திருச்சி ரெயிலானது வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர இயக்கப்படுகிறது.
ஒரு நாள் சேவையை பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்திருந்தனர். தற்போது இந்த ரெயிலை தினசரி ரெயிலாக மாற்றி சேவை ரத்தான நாட்களிலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்தினருக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தற்போது இந்த வழித்தடத்தில் ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டு விட்டதால் இந்த பயணிகள் ரெயிலும் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.