SP பட்டினத்தில் குளத்தில் வாலிபர் மூழ்கி உயிரிழப்பு... குளிக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்...



ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எஸ்.பி. பட்டினம் கிராமம் உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அமீர் என்பவரது மகன் முகமது யூசுப். இவர் சென்னையில் உள்ள மளிகை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது விடுமுறை காரணமாக அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். தொடர்ந்து அவர் நேற்று மாலை பள்ளிவாசல் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அவர் குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அதனால் தண்ணீரில் தத்தளித்த அவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

குளிக்கச் சென்ற வாலிபர் வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்ப வராததால் அவரது குடும்பத்தினர் குலத்திற்குச் சென்று அவரை தேடி உள்ளனர். அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து எஸ். பி. பட்டினம் காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை அந்த குளத்தில் குளிக்க சென்றவர்கள் வாலிபர் முகமது யூசுப் சடலமாக குளத்தில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து அவரது குடும்பத்தினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த வாலிபர் குளத்தில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியிலும் அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments