திருவாடானை தாலுகா எஸ்.பி. பட்டினத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி 2-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், எஸ்.பி.பட்டினம் ஜமாத் தலைவர் ஹசன் அலி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 35-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன. எஸ்.பி. பட்டினத்தில் இருந்து ஓரியூர் சாலையில் அதிகபட்சமாக 8 மைல் தூரம் சென்று வந்த மாட்டு வண்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள், வெற்றிக்கோப்பைகள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மாட்டுவண்டி பந்தயத்தை காண்பதற்கு சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள், பொதுமக்கள் குவிந்திருந்தனர். திருவாடானை துணை சூப்பிரண்டு நிரேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.