கோட்டைப்பட்டினத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி!




கோட்டைப் பட்டினம் ஆண்கள்  மற்றும் பெண்கள் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகளின் கோட்டைப் பட்டினம் மீனவர் காலனி  மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி வாகனம் மூலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க நிலை திரு சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலின்படி
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.
 
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்போம்! 

நம் பள்ளி.! நம் பெருமை.!

அரசு பள்ளி பெருமையின் அடையாளம்..!! எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம்..! புதுமைப்பெண் திட்டம் நான் முதல்வன்.. திட்டம்

அரசின் நலத்திட்டங்கள் போன்றவை குறித்த  வாசகங்கள்  மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி  கடைத்தெரு வழியாக பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்வினை  மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு செழியன் மற்றும் திருமதி இந்திராணி  ஆகியோர் தலைமையிலும் மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்களின்  முன்னிலையில் தொடங்கியது.
 
பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அருளானந்து ராணி முகமது பாரூக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்  மாணவர்கள் சேர்க்கை பேரணிக்கான செயல்பாடுகளை செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் ஆசிரியர், பயிற்றுநர்கள் முத்துராமன், வேல்சாமி, இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் இப்பள்ளியின் ஆசிரியர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments