அறந்தாங்கி -சிவகாசி இடையே நேரடி பஸ் இயக்க கோரிக்கை




புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரிய நகரமாக அறந்தாங்கி உள்ளது. நகராட்சி, சட்டசபை தொகுதி மற்றும் தாலுகா தலைநகரமாக உள்ளது. அறந்தாங்கி மற்றும் அருகில் உள்ள ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுகாவை சேர்ந்த ஏராளமான வர்த்தகர்கள் தொழில் நிமித்தமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு சென்று வருகின்றனர்.

இவர்கள் சிவகாசி செல்ல காரைக்குடி அல்லது மதுரைக்கு சென்று அங்கிருந்து பஸ் ஏற வேண்டியுள்ளது. இதை தவிர்க்க அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி வழியாக சிவகாசிக்கு நேரடி பஸ் இயக்க அரசுப் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments