கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியில் குளிர்வித்த கோடை மழை!



கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியில் அதிகாலை திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

வெயிலின் தாக்கம் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.இரவில் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் தூங்க முடியாமல் மக்கள் தவித்தனர். இரவு நேரங்களில் மின் விசிறியில் இருந்து வரும் காற்று கூட அனல் காற்றாக தான் வீசியது.

இந்த நிலையில் 4 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியில்    திடீரென இன்று 04.04.2023 செவ்வாய்க்கிழமை அதிகாலை 05.00 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இதைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது.இந்த மழை விட்டு விட்டு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் வெப்பம் ஒரளவு தணிந்து குளிர்ந்த காற்று வீசியது .

மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது மழை பெய்ததால் எப்போது நெடுங்குளம் மற்றும் காட்டுக்குளம்  நிறையும் என ஏக்கத்துடன் கோபாலப்பட்டிணம் மக்கள் உள்ளனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...





Post a Comment

0 Comments