கோபாலப்பட்டிணம் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் பெண்களுக்கான இப்தார் நிகழ்ச்சி!



கோபாலப்பட்டிணம் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் பெண்களுக்கான சிறப்பு இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் பெண்களுக்கான இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டாக நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் 2023-ஆம் ஆண்டு பெண்களுக்கான இப்தார் நிகழ்ச்சி இன்று 19.04.2023 புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் ரஹ்மானியா பெண்கள் மதராசா நூருல் அய்ன் வளாகத்தில் நடைபெற உள்ளது. 

இந்த இப்தார் நிகழ்ச்சியில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த அல்ஹாஃபிழ் R.ஷாகுல் ஹமீது குத்ஸி அவர்கள் இன்றைய இஸ்லாமிய பெண்களின் நிலை என்ற தலைப்பில் சிறப்பு பயான் நிகழ்த்த உள்ளார். 

இந்நிகழ்வில் பெண்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

தகவல்: நைனா முகமது, உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments