திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கோவில் திருவிழாவை பார்த்துவிட்டு இளைஞர்கள் மூன்று பேர் ரயில்வே தண்டவாளத்தின் மீது படுத்து உறங்கியதில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது முத்துப்பேட்டை பகுதி. இந்த பகுதியை ஒட்டியுள்ள உப்பூர் ஆலங்காடு பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இரவு திருவிழாவை முன்னிட்டு அங்கு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இதனைப் பார்ப்பதற்காக வந்த நாகை மாவட்ட மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் பாண்டி (22) என்ற இளைஞரும், உப்பூர் பகுதியைச் சேர்ந்து அருள் (16) கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பரத்குமார் (17) பேரும் திருவிழா முடிந்த பிறகு அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் படுத்திருந்தனர்.
அந்த நேரம் தாம்பரம் செங்கோட்டை வாராந்திர அதிவிரைவு ரயில் வந்துள்ளது. ரயில் வருவதைக் கண்டு சுதாரித்து எழுவதற்குள் ரயில் மோதி முருகன் பாண்டி, அருள் ஆகிய இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பரத் என்பவர் மட்டும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவில் திருவிழா பார்க்க வந்த இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.