மீமிசல், கோட்டைப்பட்டினம் போலீஸ் நிலையங்களில் டி.ஐ.ஜி. ஆய்வு!



மீமிசல், கோட்டைப்பட்டினம் போலீஸ் நிலையங்களில் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

மீமிசல் மற்றும் கோட்டைப்பட்டினம் போலீஸ் நிலையங்களில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போலீஸ் நிலையங்களில் உள்ள கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு காவலர்களுக்கு சிறப்புரை வழங்கினார். 
திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர்

இந்த ஆய்வின் போது கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம், மணமேல்குடி இன்ஸ்பெக்டர் குணசேகரன், கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments