புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஃபித்ரா அரிசி ஏழைகளின் வீடு தேடி வழங்கப்பட்டது.
ரம்ஜான் மாத இறுதியில் ஏழைகளுக்கு வழங்கப்படும் ஃபித்ராவை மனிதநேய ஜனநாயக கட்சியின் இஸ்லாமிய கலாச்சார பேரவை நிர்வாகிகள் கூட்டாக வசூல் செய்து ஏழைகள் வீடு தேடி வினியோகம் செய்யும் சேவையை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகின்றனர்.இவ்வமைப்பினர் இந்த வருடமும் கூட்டாக வசூல் செய்து ஏழைகளுக்கு வினியோகம் செய்தனர்.
இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் மாவட்ட துணை செயலாளர் நோக்கியா சாகுல் அனைவரையும் வரவேற்றார். மருத்துவசேவை அணி மாவட்ட செயலாளர் அப்துல் கனி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி மற்றும் மாநில அமைப்பு சட்டம் ஒழுங்கு உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான முனைவர் முபாரக் அலி ஏழைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான 5 கிலோ ஃபித்ரா அரிசி கொண்ட பைகளை வழங்கி துவங்கி வைத்தனர். அதன் பின்னர் ஏனைய நிர்வாகிகள் ஏழைகளின் வீடுகளை தேடி சென்று வழங்கினார்கள். கிரசன்ட் பள்ளி தாளாளர் அசாருதீன் வாழ்த்துரை வழங்கினார். பேரவை மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது அனைவருக்கும் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.