ரயில் நிலையங்கள் வருவாய்,பயணிகள் வருகை அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பயணிகள் அதிக மாக வரும் ரயில் நிலையங்களை அடையாளம் கண்டு, அவற்றை மேம்படுத்தும் நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
தெற்கு ரயில்வே தரவரிசை பட்டியலின்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1.085 கோடி வருவாய் ஈட்டி முதல் இடத்தையும், எழும்பூர் ரயில் நிலையம் ரூ.525.96 கோடிவருவாய் ஈட்டி 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.
2022-23-ம் நிதியாண்டில், தெற்குரயில்வேயில் அதிக வருவாய்ஈட்டிய முதல் 50 நிலையங்கள் பட்டியலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. கோயம்புத்தூர் ரயில்நிலையம் ரூ.283.36 கோடி வருவாய்ஈட்டி 3-வது இடத்தையும், திருவனந்தபுரம் ரயில் நிலையம் ரூ.205.81 கோடியும், எர்ணாகுளம் ரயில் நிலையம் ரூ.193 கோடியும் ஈட்டி முறையே 4-வது, 5-வது இடத்தையும் பெற்றுள்ளன.
மதுரை சந்திப்பு ரூ.190.76 கோடிஈட்டி 6-வது இடத்தையும், தாம்பரம் ரயில் நிலையம் ரூ.182.68 கோடியுடன் 7-வது இடத்தையும் பிடித்துள்ளன. காட்பாடி ரூ.168.39 கோடியுடன் 8-வது இடத்தையும், திருச்சிராப்பள்ளி ரூ.140.24 கோடியுடன் 10-ம் இடத்தையும் பிடித்தன.
இந்த நிலையங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று ஒரு ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.