புதுக்கோட்டை மாவட்டத்தில் `நகல் மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு தபால் மூலம் வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கியது. இதனை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்து புதுக்கோட்டை தலைமை தபால் நிலைய அலுவலர் லலிதாவிடம் வழங்கினார். அதன்பின்னர் கலெக்டர் கவிதாராமு தெரிவித்ததாவது;- ``இத்திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் வட்டத்தில் ஆன்லைன் முறையில் ரூ.45 அரசுக்கணக்கில் செலுத்திய குடும்ப அட்டைதாரர்களுக்கு நகல் குடும்ப அட்டையினை தபால் துறை வாயிலாக அவர்களது இல்லத்திற்கே நேரடியாக தபால் மூலம் அனுப்பும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பித்த 472 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தபால் மூலம் நகல் குடும்ப அட்டை வினியோகிக்கப்படுகிறது. எனவே இந்த சேவையினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்'' என்றார். இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், விற்பனை அலுவலர் நாகநாதன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.