பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிய பயனாளியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவியை போலீசார் கைது செய்தனர்.
ஊராட்சி தலைவர்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழ்ப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணி. விவசாயி. இவரது மனைவி வேணிமணி கீழ்ப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார்.
அதே ஊரைச் சேர்ந்த எம் ஜிஆர் என்பவர் 2021- 22-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டது. அவரும் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் எம்ஜிஆர் ஊராட்சி மன்ற தலைவி வேணி மணியிடம் சென்று, வீட்டு ரசீது இதுவரை தரவில்லை. எனவே வீட்டு ரசீது தாருங்கள், என்று கேட்டார்.அப்பொழுது, ‘‘நீ வீடு கட்டியதற்கு எனக்கு எதுவும் செலவுக்கு பணம், கொடுக்கவில்லை ரூ.30 ஆயிரம் கொடுத்தால் வீட்டு ரசீது தருவதற்கு ஏற்பாடு செய்கிறேன்’’ என்று கூறினார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத எம்ஜிஆர் மன வேதனை அடைந்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன், இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், கோபிநாதன், முருகன் மற்றும் போலீசார் உடன் சென்று நேற்று காலை ரூ.30 ஆயிரத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவி எம்.ஜி.ஆர். இடம் கொடுத்து ஊராட்சி மன்ற தலைவர் வேணிமணியிடம் கொடுக்கும்படி கூறினர்.
கைது
அதன்படி ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்துடன் ஊராட்சி தலைவி வேணிமணியிடம் லஞ்சமாக கொடுக்க எம்ஜிஆர் சென்றார். லஞ்ச ஒழிப்பு போலீசாரும் மாறு வேடத்தில் சென்று அங்கு தயாராக இருந்தனர்.
ஊராட்சி மன்ற தலைவியிடம் வேணிமணியிடம் எம்ஜிஆர் அதனை கொடுத்தபோது அதனை அவர் பெற்றுக்கொண்டார். அப்போது மாறு வேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் வேணிமணியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கியபோது ஊராட்சி தலைவி கைதானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.