பொன்னமராவதி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குண்டும், குழியுமான சாலை
பொன்னமராவதி தாலுகா கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும், இரவு நேரங்களில் அந்த வழியாக புதிதாக ெசல்லும் வாகன ஓட்டிகள் குழிகள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள்.
எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
நாற்றுநடும் போராட்டம்
இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி அப்பகுதியில் மழைநீரில் தேங்கியுள்ள சாலையில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பழுதடைந்த சாலையால் கடந்த 10 ஆண்டுகளாக அவதியடைந்து வந்தோம்.
இதையடுத்து, அமைச்சர் ரகுபதி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது தொகுதி நிதியில் இருந்து சாலையை சீரமைக்க நிதியை ஒதுக்கினார். ஆனால் இதுவரை சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.