கோபாலப்பட்டிணத்தில் தொடர் கோடை மழை காரணமாக: முழு கொள்ளளவை எட்டிய காட்டுக்குளம்!! !!




தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கோடை மழை காரணமாக கோபாலப்பட்டிணத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் காட்டுக்குளம், நெடுங்குளம் ஆகிய இரண்டு குளங்களை மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்

கோபாலப்பட்டிணத்தில் கடந்த (2019 முதல் 2021 வரை) 3 ஆண்டுகள் நல்ல மழை பெய்ததின் காரணமாக குளங்கள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதுடன் மக்களுக்கும் தேவை பூர்த்தியானது. பொதுவாக வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை குளத்தை சுத்தம் செய்வதற்காக தண்ணீரை வெளியேற்றி மீன்களை பிடித்து ஏலம் விடுவது ‌வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரண்டு குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. போதிய பருவ மழை இல்லாமல் குளங்களில் உள்ள நீர் மாசடைந்து வற்றிய நிலையில் காணப்பட்டு வந்தது.  

இந்நிலையில் மே 03 புதன்கிழமை இரவு ஒரே நாளில் பெய்த கண மழையால் 
மக்கள் பயன்பாட்டுக்குரிய காட்டுகுளம் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. நெடுங்குளம் நிரம்பி வருகிறது.

முன்னர் வற்றி கிடந்த காட்டுக்குளம் நிரம்பி வருவதால் இப்பொழுது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு குளத்திற்கு மக்கள் மே 05 முதல் குளிக்க ஆரம்பம் செய்து விட்டனர்

ஒரே நாளில் குளத்தில் இவ்வளவு தண்ணீர் வந்துள்ளதால் ஆச்சரியமாக இருக்கிறது என்றும் இவ்வளவு நாட்களாக வீட்டில் குளித்தோம் இனி குளத்தில் குளிக்க போகிறோம் என்று ஊரில் வசிக்ககூடிய குளத்தில் குளிக்கும் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

மேலும் வெளிநாட்டில் குழாய் தண்ணீரில் குளித்து வரும் கோபாலப்பட்டிணம் உறவுகள் இதை பார்க்கையில் நாம் எப்பொழுது ஊருக்கு வந்து இந்த குளத்தில் நீச்சலடித்து குளிக்க போகிறோம் என்ற ஏக்கத்தில் கூட இருக்ககூடும்.

மழையால் குளங்கள் நிரம்பி இருப்பது கோபாலப்பட்டிணம் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கோடை மழை காரணமாக நமது ஊர் கோபாலப்பட்டிணத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. மக்கள் பயன்பாட்டுக்கு உள்ள குளங்கள் மழை நீரால், நிரம்பி வருகிறது 

இத்தகைய சூழலில் கோபாலப்பட்டிணத்தில் உள்ள காட்டுக்குளம் முழு கொள்ளளவை எட்டிவிட்டதால், அக்குளங்களுக்கு குளிக்க செல்லும் நாமும் சரி, நம்மோடு அழைத்து செல்லப்படும் நமது வீட்டு சிறு பிள்ளைகளாயினும் சரியே மிகவும் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் குளிக்குமாறு அன்போடு அறிவுருத்திக்கொள்ளப்படுகிறது.

தற்போது கோடை விடுமுறை என்பதால் குளத்திற்கு சிறுவர்கள் அதிமாக வருவார்கள் அதிகம் நேரம் குளிப்பார்கள் 

எனவே பிள்ளைகளை வெகு ஆழத்திற்கு அழைத்து செல்வதோ, அருகாமையில் குளித்துக்கொண்டிருக்கும் போதோ அவர்களை கண்ணும், கருத்துமாக மிகவும் பாதுகாப்பாக குளிப்பாட்டி அழைத்து செல்லுங்கள் அதுபோக உங்கள் கண் பார்வைக்கு எட்டும் தூரத்திற்க்கே குளிக்க அனுமதித்து அவர்களை மிகவும் எச்சரிக்கையோடு கண்கானித்திடுங்கள். அதுபோக வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லாது பிள்ளைகளை தனியாக குளிக்க, குளங்களுக்கு ஒருபோதும் அனுப்பாதீர்கள்.
  
குறிப்பாக குளத்திற்கு சிறுவர்கள் செல்வதை பெற்றோரும் அப்பகுதி பொதுமக்களும் கண்காணித்து தடுப்பதன் மூலம் அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும். 

வீட்டைவிட்டு வெளியில் செல்லும் குழந்தைகளை நேரம் ஒதுக்கி கண்காணிக்க வேண்டியது பொருப்பாளர்களின் கடமையும் பொறுப்பாகும்.












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments