பயணிகள் வருகை
புதுக்கோட்டை ரெயில் நிலையம் மிகவும் பழமையானதாகும். புதுக்கோட்டை வழியாக சென்னை, ராமேசுவரம், காரைக்குடி, புவனேஸ்வர், கோவை, செங்கோட்டை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது. புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வருகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. கொரோனா காலக்கட்டத்திற்கு பின் ரெயில் போக்குவரத்து சீரான பின்பு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
நீண்ட தூரம் செல்லக்கூடிய ஊர்களுக்கு ரெயில் பயணத்தையே பொதுமக்கள் தேர்வு செய்கின்றனர். டிக்கெட் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கடந்த 2022-2023-ம் நிதியாண்டில் புதுக்கோட்டை ரெயில் நிலையம் பயணிகள் மூலம் ரூ.4 கோடியே 58 லட்சத்து 62 ஆயிரத்து 189 வருவாய் ஈட்டியுள்ளது. இது புதுக்கோட்டை ரெயில் நிலையத்தின் அதிகபட்ச வருவாய் ஆகும்.
வருவாய் அதிகரிப்பு
கடந்த 2021-22 நிதியாண்டில் புதுக்கோட்டை ரெயில் நிலையம் வருவாய் பயணிகள் மூலம் ரூ.3 கோடியே 66 லட்சத்து 99 ஆயிரத்து 503 ஆகும். இதனை கடந்த 2022-23 நிதியாண்டின் பயணிகள் வருவாயுடன் ஒப்பிடும்போது ரூ.91 லட்சத்து 62 ஆயிரத்து 686 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த நிதியாண்டில் (2022-23) பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்து 979 என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் காலங்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.