Wow..! அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் குடும்பத்தினருக்கு சிறப்பு ஆஃபர் … ஊராட்சி மன்ற தலைவரின் சூப்பர் ஐடியா!




தமிழ்நாட்டில் புற்றீசல் போல் பெருகிவரும் தனியார் பள்ளிகளுக்கு இடையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு திட்டங் களை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது.

அதன் வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபழஞ்சி ஊராட்சியில் தலைவராக இருந்து வருவவர் வன்னி செல்விமணி. இவர் அரசு பள்ளிகளில் தனது ஊராட்சிக்கு உட்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்த்தால் அவர்களுக்கு வீட்டு வரியில் சலுகை அளிக்கப்படும் என புதிய திட்டத்தை கடந்த மே ஒன்றில் ஊராட்சியில நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இதன்படி தனது பயணப்படி மற்றும் அமர்வு படியை இதற்கு மூலதனமாக பயன்படுத்தி இந்த வீட்டு வரி சலுகையை அளித்திட உள்ளார். அனைவரும் வியக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடபழஞ்சி ஊராட்சித் தலைவரின் இந்த முயற்சி பொதுமக்களிடையே மட்டும் இல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments