அன்னவாசல் அருகே வயலோகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிகாரிகளாகவும், ஆசிரியர்களாகவும் தொழிலதிபர்களாகவும் வளர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1997-98 வருடங்களில் 10-ம் வகுப்பு படித்த மாணவ- மாணவிகள் வயலோகம் 1998 நண்பர்கள் என்ற வாட்ஸ்-அப் குழு ஒன்றை ஏற்படுத்தி இப்பள்ளியில் படித்த மாணவர்களை ஒன்றிணைத்தனர். பின்னர் தாம் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும். பாடம் சொல்லிக் கொடுத்து வாழ்க்கையில் முன்னேற்றிய ஆசிரியர்களுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னாள் மாணவர்களின் சங்கம நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமையா, முன்னாள் மாணவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் மூலம் ஒவ்வொருவரும் பழைய நண்பர்களை சந்தித்து தங்களது நிகழ்வுகளையும், சந்தோஷங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் தாங்கள் படிக்கும்போது பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கழிவறையை திறந்து வைத்து பள்ளி வளாக பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ஆசிரியர் சோலாட்சி, மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர் சக்திவேல் வரவேற்றார். முடிவில் முன்னாள் மாணவர் முருகானந்தம் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.